மும்பை, பிப்.8 (டிஎன்எஸ்) இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று (பிப்.8) தடுமாற்றம் காணப்பட்டது.
மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டெண் சென்செக்ஸ் சரிவதும் உயர்வதுமாக தடுமாற்றத்தில் இருந்தது. பின்னர், இன்றைய வர்த்தக முடிவில் 19 புள்ளிகள் உயர்ந்து 15,935 புள்ளிகளில் முடிவடைந்தது.
தேசியப் பங்குசந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 3 புள்ளிகள் உயர்ந்து 4,760 புள்ளிகளில் முடிவடைந்தது. (டிஎன்எஸ்)